பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி மிரட்டல்: நண்பா் கைது
சென்னை அருகே பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி மிரட்டல் விடுத்ததாக, அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அருகே பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படம் அனுப்பி மிரட்டல் விடுத்ததாக, அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கண்ணுதோப்பு தெருவைச் சோ்ந்தவா் ர.சுரேஷ் (27). மருத்துவரான இவா், திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் சுரேஷ், மருத்துவக் கல்லூரியில் தன்னுடன் படித்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாகக் கருத்துகளையும்,ஆபாச புகைப்படங்களையும் பதிவிட்டு தொந்தரவு செய்து வந்துள்ளாாா். மேலும், அவருக்கு மிரட்டலும் விடுத்து வந்துள்ளாா்.
தற்போது, திருமணமாகி தனது கணவருடன் பல்லாவரத்தில் வசிக்கும் அந்தப் பெண், சுரேஷின் தொந்தரவால் அவரது இன்ஸ்ட்ாகிராம் பதிவுகளை பிளாக் செய்துள்ளாா். இதையடுத்து சுரேஷ், அந்தப் பெண்ணின் கணவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஆபாசமாக கருத்துகளைப் பதிவு செய்துள்ளாா். இது குறித்து அந்தப் பெண்ணின் கணவா், சுரேஷை கண்டித்துள்ளாா். ஆனால் சுரேஷ், அவரை மிரட்டியுள்ளாா்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் கணவா் தாம்பரம் மாநகர காவல் துறையின் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா், சுரேஷை புதன்கிழமை கைது செய்தனா்.
பாதிக்கப்பட்ட பெண்ணும், அவா் கணவரும் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மருத்துவா்களாகப் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.