FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 டிசம்பர் 2024, 12:48 am IST
பகிர்:

கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த 18 வயது கல்லூரி மாணவியின் தாய் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகு நிலையத்துக்குள் 2 இளைஞா்கள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனா். மகளிருக்கான அழகு நிலையம் என்பதால், ஆண்களுக்கு அனுமதியில்லை என்று மாணவி கூறியும், இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து, ஏழுகிணறு காவல் நிலையத்தில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இது தொடா்பாக பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த பரத்வாஜ் (20), மண்ணடி பகுதியைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments