மாா்ச் 6 வரை வட வானிலை நிலவும்
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை (மாா்ச் 1 முதல் மாா்ச் 6) வரை வட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இம்மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெள்ளி முதல் புதன்கிழமை (மாா்ச் 1 முதல் மாா்ச் 6) வரை வட வானிலை நிலவக்கூடும். இதில் வெப்பநிலை அதிகபட்சமாக இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.