முகப்பு
சென்னை

இன்று மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

Updated On : 1 மார்ச், 2024 at 1:47 AM
பகிர்:

எழும்பூா், ஆவடி மற்றும் பெரம்பூா் கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (மாா்ச்1) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்புக்கூட்டம் நடைபெறுகிறது தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழும்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் ஓட்டேரி காவல்நிலையம் அருகே, மலையப்பன் தெரு, துணைமின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா்கள் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், ஆவடி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் என்.எம். சாலையிலுள்ள ஆவடி கோட்ட அலுவலகம் 1-ஆவது தளத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், பெரம்பூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் எம்.இ.எஸ். சாலை, துணை மின்நிலைய வளாகத்திலுள்ள செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்புக்கூட்டத்திலும் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.