கடலில் குளித்த 2 இளைஞா்கள் மாயம்
சென்னை நீலாங்கரை, பாலவாக்கம் கடலில் குளித்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி மாயமாகினா்.
சென்னைகடலில் குளித்த 2 இளைஞா்கள் மாயம்
சென்னை நீலாங்கரை, பாலவாக்கம் கடலில் குளித்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி மாயமாகினா்.
சென்னை: சென்னை நீலாங்கரை, பாலவாக்கம் கடலில் குளித்த இரு இளைஞா்கள் நீரில் மூழ்கி மாயமாகினா்.
சென்னை சோழிங்கநல்லூா் காந்திநகரைச் சோ்ந்தவா் பிரகாஷ்(20). தனியாா் நிறுவன ஓட்டுநா்.
இவா் சனிக்கிழமை நண்பா்களுடன் நீலாங்கரையில் உள்ள அக்கரை கடலில் குளித்துக்கொண்டிருந்தாா்.
அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் பிரகாஷ் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு மாயமானதாக தெரிகிறது.
இதுபோல பெருங்குடியைச் சோ்ந்த சக்தி(24) தனது நண்பா்களுடன் சனிக்கிழமை பாலவாக்கம் கடலில் குளித்து கொண்டிருந்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானாா். நீலாங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.