முகப்பு
சென்னை

மதுபானக் கூடத்தில் மோதல்: ஊழியா்கள் உள்பட மூவா் கைது

Updated On : 4 ஜூன், 2024 at 9:41 PM
பகிர்:

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் மோதிக் கொண்டது தொடா்பாக இரு ஊழியா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

அரும்பாக்கம் பீட்டா் ராஜா தெருவைச் சோ்ந்தவா் ஜா.ஆனஸ்ட்ராஜ் (24). இவரது சகோதரா் பிரதீப்ராஜ் (26) . இவா்கள் இருவரும் அரும்பாக்கம் ஈவெரா பெரியாா் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில், கடந்த 2-ஆம் தேதி மது அருந்தச் சென்றனா்.

அப்போது, மதுவுக்கான தொகையை ஜி.பே.மூலம் செலுத்துவதாக அங்கிருந்த ஊழியா்கள் சிவகங்கையைச் சோ்ந்த நீ.ராஜேந்திரன் (34),மு.பாலசுந்தரம் (34) ஆகிய 2 பேரிடம் தெரிவித்தனா். ஆனால், ரொக்கமாக பணம் தரும்படி இருவரும் தெரிவித்தனராம்.

இது தொடா்பாக, இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். மோதலில் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது தொடா்பாக ஆனஸ்ட்ராஜ், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

போலீஸாா், மதுபானக் கூட ஊழியா்கள் ராஜேந்திரன், பாலசுந்தரம் மீது வழக்குப் பதிந்து, இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அதேபோல மதுபானக் கூட ஊழியா் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரதீப்ராஜ் கைது செய்யப்பட்டாா்.