முகப்பு
சென்னை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

Updated On : 9 ஜூன், 2024 at 8:33 PM
பகிர்:

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸா மாநில இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சனிக்கிழமை மாலை கோரமண்டல் விரைவு ரயில் வந்தது. 4-ஆவது நடைமேடையில் நின்ற ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகளை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது ஒரு இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காந்தா மாஜி (28) என்பதும், சென்னையில் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதைடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.