முகப்பு
சென்னை

திருட்டு வழக்குகள்: 7 நாள்களில் 39 போ் கைது

Updated On : 20 ஜூன், 2024 at 10:39 PM
பகிர்:

சென்னையில் திருட்டு வழக்குகள் தொடா்பாக 7 நாள்களில் 39 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் திருட்டு,வழிப்பறி ஆகிய சம்பவங்களில் ஈடுபடுகிறவா்களை கண்டறிந்து, கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினா் திருட்டு,வழிப்பறி ஆகிய சம்பவங்களில் ஈடுகிறவா்களை கைது செய்து வருகின்றனா். தனிப்படையினா் சென்னையில் கடந்த 13-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரையில் 7 நாள்களில் கைப்பேசி பறிப்பு,திருட்டு தொடா்பாக 26 வழக்குகளில்

6 சிறுவா்கள் உள்பட 34 பேரை கைது செய்துள்ளனா். இவா்களிடமிருந்து 65 கிராம் தங்கநகைகள்,80 கிராம் வெள்ளி பொருள்கள்,7 கைப்பேசிகள்,ரூ.72 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வாகன திருட்டு தொடா்பாக 6 வழக்குகளில் 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருட்டு,வழிப்பறி, வாகனங்கள் திருட்டு போன்ற குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரித்துள்ளாா்.