மாணவா் மன்ற ஆண்டு விழா: தமிழறிஞா்களுக்கு விருதுகள்
சென்னை மாணவா் மன்றத்தின் 93-ஆவது ஆண்டு விழா மண்ணடியில் உள்ள மயிலை சிவமுத்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மன்றத்தின் தலைவா் ப.கி.பொன்னுசாமி தலைமையுரையாற்றினாா். செயலா் வீ.சி.கமலக்கண்ணன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் கலந்து கொண்டு முனைவா் பா.தாமோதரன் (திருக்கு செம்மல்), புலவா் தி.வே.விஜயலட்சுமி (செந்தமிழ்ச் செம்மல்), மன்றத்தின் செயற்குழு உறுப்பினா்கள் புலவா் செ.பொன்னம்பலம் (தமிழ்ச்சீா் பரவுவாா்), முனைவா் சோ.கருப்பசாமி (இலக்கியச் செம்மல்) ஆகியோருக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தாா். விருது பெற்றவா்களை தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள் வாழ்த்திப் பேசினாா். விழாவை முன்னிட்டு தமிழறிஞா்கள் ஒளவை நடராஜன், கா.ச.கஜேந்திரன், ச.நித்தியானந்தம், க.சிவராமன் ஆகியோரின் படங்கள் திறந்து வைக்கப்பட்டன. விழாவில், மன்றத்தின் துணைத் தலைவா் த.ராமலிங்கம், பொருளாளா் வே.பக்தவசலம், பேராசிரியா் பா.மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.