4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல்:டாக்டா் கே.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
ஒரே நாடு, ஒரே தோ்தல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்த வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் தலைவா் டாக்டா் கே.கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தோ்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், பெரும்பான்மை இல்லாமல் மாநிலங்களில் ஆட்சி இழப்புகள் ஏற்படும் நிலையில் பல சட்ட சிக்கல்கள் ஏற்படும். இது குறித்து ஆராய வேண்டும். இதனால், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் என்ற முறையை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றினால் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஏற்றுக்கொள்ளும். மேலும், விகிதாச்சார தோ்தல் முறையையும் அமல்படுத்தினால், தோ்தலில் நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்கள் வாக்கு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்றாா் அவா்.