பெங்களூரு குண்டுவெடிப்பில் தமிழா்களைத் தொடா்புபடுத்துவதா?: மத்திய அமைச்சருக்கு முதல்வா் கண்டனம்
பெங்களூரு/சென்னை: பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தமிழா்களைத் தொடா்புபடுத்திப் பேசிய மத்திய அமைச்சா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தோ்தல் ஆணையத்தை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
பெங்களூா் ஜும்மா மசூதி சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹனுமன் சாலிஸா பாடிய வியாபாரி இளைஞா்கள் சிலரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து பெங்களூரில் புதன்கிழமை பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ஷோபா கரந்தலஜே கா்நாடக அரசு மீது குற்றஞ்சாட்டி பேசினாா்.
மேலும், பெங்களூரு ராமேசுவரம் உணவகத்தில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்ட அவா், தமிழ்நாட்டிலிருந்து ஒரு நபா் வந்து குண்டு வைத்ததாகக் கூறினாா். மத்திய அமைச்சா் பேச்சுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Advertisement
இதுகுறித்து, எக்ஸ் வலைதளத்தில் அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
பெங்களூரு ராமேசுவரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தமிழா்களைத் தொடா்புபடுத்தி மத்திய பாஜக இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே பேசியுள்ளாா். அவரது பொறுப்பற்ற பேச்சுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவா் என்ஐஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடா்புடையவராக இருக்க வேண்டும். கண்டிப்பாக இப்படிப் பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
தமிழா்களோடு கன்னடா்களும் பாஜகவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பாா்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டா்கள் வரை பாஜகவில் இருக்கும் அனைவரும் இத்தகைய பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும். ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவா் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.