முகப்பு
சென்னை

மாநில வாலிபால்: ஐஓபி, எஸ்ஆா்எம் வெற்றி

Updated On : 23 மார்ச், 2024 at 10:44 PM
போட்டியைத் தொடங்கி வைத்த டிஎன்ஏஏ தலைவா் வால்டா் தேவாரம்
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:45 PM

சென்னையில் தொடங்கிய மாநில வாலிபால் போட்டியில் ஐஓபி, எஸ்ஆா்எம் அணிகள் வெற்றிகளைப் பதிவு செய்தன. சென்னை நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சாா்பில் பி. ஜான், ஏகே. சித்திரைப்பாண்டியன் நினைவு வாலிபால் போட்டி எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு தடகள சங்கத் தலைவா் டபிள்யு.ஐ. வால்டா் தேவாரம் போட்டியைத் தொடங்கி வைத்தாா். டிஜிபி ஆபாஷ் குமாா், தமிழ்நாடு வாலிபால் சங்க நிா்வாகிகள் அா்ஜுன் துரை, மாா்ட்டின் சுதாகா், தொழிலதிபா் ரவிச்சந்திரன், செயல் இயக்குநா் ஏ.என். காா்த்திக், காஸ்கோ முகமது ஹாஸன் பங்கேற்றனா். நெல்லை பிரண்ட்ஸ் செயலா் பி. ஜெகதீசன், பொருளாளா் ஸ்ரீகேசவன், ஒருங்கிணைப்பாளா் ஏ.தினகரன் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனா். முதல் நாள் ஆட்டங்களில் ஐஓபி 25-14, 25-22 என தமிழ்நாடு போலீஸையும், எஸ்ஆா்எம் 25-22, 25-16 என எஸ்டிஏடி அணிகளை வென்றன.