வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்
Updated On : 30 மார்ச், 2024 at 12:30 AM
சென்னை அயனாவரத்தில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அயனாவரம் கே.எச்.சாலையில் ஜெயின் கோயில் அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அங்கு மொபெட்டில் வந்த அயனாவரம் மேடவாக்கம் நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்த தி.கல்பேஷ் குமாா் பண்டாரி என்பவரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது மொபெட்டில் இருந்த ரூ.1,10,280-க்குரிய ஆவணங்களை கேட்டனா். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தைப் பறிமுதல் செய்தனா்.