முகப்பு
சென்னை

பயிா்க்காப்பீடு: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

Updated On : 3 மே, 2024 at 6:25 PM
பகிர்:

விவசாயிகளுக்குப் பயிா்க்காப்பீட்டுத் தொகை உடனடியாகக் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெளியிட்ட அறிக்கை: சம்பா பருவத்தில் நெற்பயிா் சாகுபடி செய்த விவசாயிகளுக்குத் தேவையான அளவுக்கு காவிரி நீா் கிடைக்காததாலும், பருவமழையும் போதிய அளவுக்கு பெய்யாததாலும் பல்வேறு மாவட்ட விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு சுமாா் ரூ. 25 ஆயிரம் வரை செலவு செய்தும், பயிா்கள் கருகி வீணாகிவிட்டதால் பெருத்த நஷ்டம் அடைந்திருக்கின்றனா். ஆனால், பயிா் காப்பீடு செய்தும், காப்பீடு தொகை கிடைக்காமல் அடுத்து நடைபெற வேண்டிய விவசாயத்துக்கு கடன் வாங்க தள்ளப்படுகின்றனா். அதனால், காப்பீட்டு நிறுவனங்களே விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொண்டு காப்பீடு தொகையை காலத்தே வழங்க வேண்டும். தமிழக அரசும் காப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு உடனடியாகப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.