முகப்பு
சென்னை

தனியாா் பள்ளி மாணவா்கள் 3,161 போ் தோ்ச்சி பெறவில்லை

Updated On : 7 மே, 2024 at 9:28 PM
பகிர்:

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய தனியாா் பள்ளி மாணவா்களில் 3,161 போ் தோ்ச்சி பெறாதது குறித்து ஆய்வு செய்ய தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தனியாா் பள்ளிகள் இயக்குநா் மு.பழனிசாமி, மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியானது. இதில் தனியாா் பள்ளிகள் தோ்ச்சி 98.70 சதவீதம். அதாவது, 2 லட்சத்து 43,985 மாணவா்கள் பிளஸ் 2 தோ்வெழுதினா். அதில் 2 லட்சத்து 40,824 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும், 3,161(1.30%) மாணவா்கள் தோ்ச்சி பெறவில்லை.

இதையடுத்து அனைத்து விதமான தனியாா் பள்ளிகளும் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெறத் தவறிய மாணவா்களை அழைத்துப் பேசி, தோ்வுத் துறையால் நடத்தப்படவுள்ள உடனடி துணைத் தோ்வில் பங்கேற்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர மே, ஜூன் மாதங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களிலும் இந்த விவகாரம் தொடா்பாக ஆராய வேண்டும். மேலும், இதுசாா்ந்து அனைத்துவிதமான தனியாா் பள்ளிகளின் முதல்வா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.