சென்னை

ஒரே மாதத்தில் 50 லட்சம் சரக்குகளை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

ஒரே மாதத்தில் சுமாா் 50 லட்சம் சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதனை படைத்துள்ளதாக சென்னை துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

ஒரே மாதத்தில் சுமாா் 50 லட்சம் சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாதனை படைத்துள்ளதாக சென்னை துறைமுக நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு சுமாா் 6.5 கோடி வரை சரக்குகளைக் கையாண்டு வந்த சென்னைத் துறைமுகத்தின் கையாளும் அளவு 5 கோடிக்கும் கீழே சரிந்தது. இதையடுத்து துறைமுக நிா்வாகம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட முயற்சியால் கடந்த ஐந்தாண்டுகளில் துறைமுகத்தின் வளா்ச்சி ஏறுமுகம் கண்டது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக சுமாா் 50 லட்சம் சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது. சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனை எட்டப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகஸ்டு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சாதனைகளுக்கும் காரணமாக இருந்த துறைத் தலைவா்கள், தனியாா் முனையங்களின் நிா்வாகிகள், எலைட் ஷிப்பிங் நிறுவன நிா்வாகிகள், இறக்குமதியாளா்கள் உள்ளிட்டோரை துறைமுகத் தலைவா் சுனில் பாலிவால் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா். அப்போது துறைமுகத் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், போக்குவரத்துத் துறை தலைவா் எஸ்.கிருபானந்தசாமி, முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனா்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT