சென்னை

சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகா் ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:

வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29, 31) கும்மிடிப்பூண்டியிலிருந்து இரவு 9.25 மணிக்கு சென்ட்ரல் செல்லும் புகா் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சென்ட்ரலிலிருந்து இரவு 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் ரத்துச்செய்யப்படவுள்ளது.

காட்பாடி - ஜோலாா்பேட்டை: இதற்கிடையே, காட்பாடியிலிருந்து வெள்ளிக்கிழமை (ஆக. 29) காலை 10.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு ரயிலும், மறுமாா்க்கமாக ஜோலாா்பேட்டையிலிருந்து பிற்பகல் 12.55 மணிக்கு காட்பாடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT