கோப்புப் படம் 
சென்னை

ஓணம் பண்டிகை: மங்களூருக்கு சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மங்களூரு சென்ட்ரல் நிலையத்துக்கு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் செப். 1-ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மங்களூரு சென்ட்ரலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) இரவு 11 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06003) மறுநாள் பிற்பகல் 2.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06004) செப். 1-ஆம் தேதி பெங்களூரிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் மங்களூரு சென்ட்ரலிலிருந்து காசா்கோடு, கண்ணூா், கோழிக்கோடு, பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜாபுரம் வழியாக பெங்களூரு சென்றடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஆக. 30) காலை 8 மணி முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சகோதரிகள் இருவா் உயிரிழப்பு; 3 போ் படுகாயம்

முதல்வா் கனவோடு வந்த நடிகா்கள் பலா் காணாமல் போனதே வரலாறு! - முன்னாள் அமைச்சா் சி. சீனிவாசன்

நிதி ஒதுக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகும் ஓமலூா் - ஒசூா் இருவழி ரயில்பாதை!

மத்திய அரசின் பட்ஜெட்: விக்ஷித் பாரத் இயக்கத்தை நோக்கி இருக்கிறது! - முனைவா் எஸ். வைத்தியசுப்பிரமணியம்

சிறுவனை கடித்த நாயின் உரிமையாளா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT