புனரமைக்கப்பட்ட விக்டோரியா அரங்கத்தை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு. உடன், மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி. 
சென்னை

விக்டோரியா அரங்கம் இன்று திறப்பு

சென்னையில் புதுப்பிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரங்கம் செவ்வாய்க்கிழமை (டிச.23) திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் புதுப்பிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரங்கம் செவ்வாய்க்கிழமை (டிச.23) திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்துக்குள் விக்டோரியா அரங்கம் அமைந்துள்ளது. 1888-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் காலத்திய இந்தக் கட்டடம் சென்னையின் மிகப்பெரிய முதல் கூட்ட அரங்கமாகவும், நாடகம், திரைப்பட அரங்கமாகவும் திகழ்கிறது.

சென்னையின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ள இந்த அரங்கம் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் பழைமையானதால் சேதமடைந்து காணப்பட்டது. அதை பழைமை மாறாமல் புதுப்பிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

அதன்படி ரூ.32.62 கோடியில் விக்டோரியா அரங்கம் பழைமாறாமல் புதுப்பிக்கப்பட்டதுடன், அரங்க நுைழுவு பகுதி வளாகத்தில் செயற்கை பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா அரங்கை செவ்வாய்க்கிழமை மாலை (டிச.23) முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.

முன்னதாக, இந்த அரங்கை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

SCROLL FOR NEXT