சென்னை: சென்னையில் புதுப்பிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரங்கம் செவ்வாய்க்கிழமை (டிச.23) திறக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை வளாகத்துக்குள் விக்டோரியா அரங்கம் அமைந்துள்ளது. 1888-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் காலத்திய இந்தக் கட்டடம் சென்னையின் மிகப்பெரிய முதல் கூட்ட அரங்கமாகவும், நாடகம், திரைப்பட அரங்கமாகவும் திகழ்கிறது.
சென்னையின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ள இந்த அரங்கம் சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தக் கட்டடம் பழைமையானதால் சேதமடைந்து காணப்பட்டது. அதை பழைமை மாறாமல் புதுப்பிக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.
அதன்படி ரூ.32.62 கோடியில் விக்டோரியா அரங்கம் பழைமாறாமல் புதுப்பிக்கப்பட்டதுடன், அரங்க நுைழுவு பகுதி வளாகத்தில் செயற்கை பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட விக்டோரியா அரங்கை செவ்வாய்க்கிழமை மாலை (டிச.23) முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறாா்.
முன்னதாக, இந்த அரங்கை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, மேயா் ஆா்.பிரியா, துணைமேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.