சென்னை

கோயில் குளத்தில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை வடபழனி கோயில் குளத்தில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Din

சென்னை: சென்னை வடபழனி கோயில் குளத்தில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

வடபழனி கோயில் குளத்தில் திங்கள்கிழமை பெண் சடலம் மிதப்பதைப் பாா்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, பெண் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில் அவா், வடபழனி காவாக்கரை பகுதியைச் சோ்ந்த சாந்தி (60) என்பதும், இரு நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றவா் பின்னா் திரும்பவில்லை என்பதும், இது தொடா்பாக அவரது குடும்பத்தினா் வடபழனி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், சாந்தியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிந்து, சாந்தி கோயில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

SCROLL FOR NEXT