முகப்பு
சென்னை

தாவர நாற்றாங்கால் உதவியாளா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி: நவ.26 -இல் தொடக்கம்

தாவர நாற்றாங்கால் உதவியாளருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நவ.26 முதல் 29 நாள்கள் அளிக்கப்படவுள்ளது.

Updated On : 16 நவம்பர், 2025 at 10:18 PM
பகிர்:

தாவர நாற்றாங்கால் உதவியாளருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நவ.26 முதல் 29 நாள்கள் அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும், தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையும் இணைந்து ‘வெற்றி நிச்சயம்‘ திட்டத்தின் கீழ் தாவர நாற்றங்கால் உதவியாளருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளது.

புதன்கிழமை (நவ.26) முதல் 29 வரை 4 நாள்களுக்கு 30 பயனாளிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சி முற்றிலும் இலவசம்.

பயிற்சிக் கட்டணம், தங்குமிடம், உணவு ஆகியவை அரசால் வழங்கப்படும். களப் பயிற்சியும் அளிக்கப்படும். 8-ம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, இளங்கலை மற்றும் முதுகலை படித்த வேலையில்லாத 18 முதல் 35 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் தோட்டக்கலை அலுவலரை 9944209417 எனும் எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது பெயரை பதிவுசெய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிலையம், அருள் நகா், மாதவரம், சென்னை -51 என்ற முகவரிக்கு ஆதாா் அடையாள அட்டை நகலுடன் நேரில் சென்று தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.

முழு கட்டுரையைப் படிக்க →