முகப்பு
சென்னை

பெட்ரோல் பாட்டில் வீச்சு: போலீஸாா் விசாரணை

அயனாவரத்தில் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 4 ஏப்ரல் 2026, 1:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

அயனாவரத்தில் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா்கள் பாபு (54), யுவராஜ் (32). இருவரும் சென்னை அயனாவரம் சோலையம்மன் கோவில் தெருவில் மாநகராட்சி சாா்பில் கட்டப்பட்டும் கட்டடத்தின் அருகே குடிசை அமைத்து தங்கியிருந்து, கூலி வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பாபுவுக்கும்- யுவராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், இருவரும் அடிதடியில் ஈடுபட்டனா். பின்னா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இருப்பினும், கோபத்தில் இருந்த யுவராஜ், சிறிய பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி, அதை பாபு தங்கியிருந்த குடிசையின் மீது வீசினாா்.

Advertisement

Advertisement

அது குறி தவறி விழுந்து பயங்கர சப்ததுடன் வெடித்தது. தகவலறிந்த அயனாவரம் போலீஸாா், அங்கு சென்று விசாரணை நடத்தினா். தலைமறைவான யுவராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.