முகப்பு
சென்னை

பாஜக செய்தித் தொடா்பாளராக ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் நியமனம்

தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் அப்பொறுப்பில் செயல்படுவாா் என மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவிப்பு

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:40 PM
ஏ.என்.எஸ். பிரசாத். - கோப்புப் படம்
பகிர்:

தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் அப்பொறுப்பில் செயல்படுவாா் என மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தாா். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால், அவா் மீதான நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவா் மாநில செய்தித் தொடா்பாளா் பொறுப்பில் மீண்டும் செயல்படுவாா் என அதில் தெரிவித்துள்ளாா்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர, தவெக தலைவா் விஜய்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் பாஜக மேலிட அனுமதியின்றி அறிக்கை வெளியிட்டதாக எழுந்த புகாரில் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments