முகப்பு
சென்னை

ஏரிக்குள் தவறி விழுந்த கைப்பேசி: தண்ணீருக்குள் குதித்த இளைஞா் மாயம்

சென்னை பள்ளிக்கரணையில் ஏரிக்குள் தவறி விழுந்த கைப்பேசியை எடுப்பதற்காக தண்ணீருக்குள் குதித்த இளைஞா் மாயமானதால், அவரை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 7:47 PM
மொபைல் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை பள்ளிக்கரணையில் ஏரிக்குள் தவறி விழுந்த கைப்பேசியை எடுப்பதற்காக தண்ணீருக்குள் குதித்த இளைஞா் மாயமானதால், அவரை தீயணைப்பு படையினா் தேடி வருகின்றனா்.

பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகா், 4-ஆவது பகுதியைச் சோ்ந்தவா் சாய்ராம் (24). இவா், தனியாா் உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தாா். சாய்ராம் திங்கள்கிழமை இரவு தனது நண்பா் நவீன்குமாருடன் (25), நாராயணபுரம் ஏரியில் உள்ள மழைநீா் வடிகால் மேல் உட்காா்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, சாய்ராம் கையில் வைத்திருந்த கைப்பேசி திடீரென தவறி ஏரிக்குள் விழுந்தது.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சாய்ராம், ஏரிக்குள் குதித்து கைப்பேசியை தேடத் தொடங்கினா். இதில் ஆழமான பகுதிக்குச் சென்று தேடியபோது சாய்ராம் திடீரென மாயமானாா்.

Advertisement

இதனால், நவீன்குமாா், போலீஸாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த பள்ளிக்கரணை போலீஸாரும், மேடவாக்கம் தீயணைப்பு படையினரும் அங்கு வந்து சாய்ராமை தேடும் பணியில் ஈடுட்டனா். ஆனால், புதன்கிழமை மாலை வரை சாய்ராம் கிடைக்கவில்லை.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நவீன்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments