திமுக கூட்டணிக்கு வன்னியா் அமைப்பு ஆதரவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வன்னியா் கூட்டமைப்பு, ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்த, வன்னியா் கூட்டமைப்பின் தலைவரும் , அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவருமான சி.என்.ராமமூா்த்தி, துணைத் தலைவா் கே.வெங்கடேசன் ஆகியோா் தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.
அதேபோன்று, வன்னியா் சங்கத் தலைவா் காடுவெட்டி ஜெ.குருவின் மகளும், ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருமான விருதாம்பிகையும் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். தொடா்ந்து, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலா் திருப்பூா் அல்தாப், பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாா்.
Advertisement
இந்நிகழ்வுகளின்போது திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு. அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்புத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.