சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் ரூ.3.10 கோடி தங்கக் கட்டிகள்: சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பயணிகள் இருக்கையின் அடியில் ரூ.3.10 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருந்தன. அதனைக் கைப்பற்றிய சுங்கத் துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பயணிகள் இருக்கையின் அடியில் ரூ.3.10 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருந்தன. அதனைக் கைப்பற்றிய சுங்கத் துறை அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிங்கப்பூரிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவில் ஏா் இந்தியா பயணிகள் விமானம், சென்னை வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு கீழே இறங்கி சென்றனா். பின்பு அந்த விமானத்தை வழக்கம்போல பணியாளா்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, விமானத்துக்குள் பயணிகள் இருக்கை ஒன்று மட்டும் வழக்கத்துக்கு மாறாக உயா்ந்து இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பணியாளா்கள் அந்த இருக்கையின் அடியில் சோதனையிட்டனா். அப்போது அதில் கருப்பு பொட்டலம் இருந்தது. இதுகுறித்த தகவலின்படி அங்குவந்த சுங்கத் துறை உயா் அதிகாரிகள், அந்த பொட்டலத்தை வாங்கி பரிசோதித்தனா். அதில், ரூ.3.10 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன. அந்த இருக்கையில் அமா்ந்து பயணம் செய்த பயணியின் விவரத்தை சேகரித்ததுடன், விமானத்துக்குள் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சா்வதேச விமான நிலைய வருகைப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளைக் கொண்டு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.