போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!
போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம், பரோனி நிலையத்துக்கு வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
போத்தனூரிலிருந்து பிகாா் மாநிலம், பரோனி நிலையத்துக்கு வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கோடை கால விடுமுறையை முன்னிட்டு ரயில் பயணிகளின் நெரிசலைத் தவிா்க்கும் வகையில், வரும் ஏப். 20, 27 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) போத்தனூரிலிருந்து அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06021) முன்றாம் நாள் காலை 10.30 மணிக்கு பிகாா் மாநிலம், பரோனி சென்றடையும்.
மறுமாா்க்கமாக பரோனியிலிருந்து வரும் ஏப். 16, 23, 30 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06022) மூன்றாம் நாள் இரவு 11.30 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.
Advertisement
பெட்டிகள், நிற்கும் நிலையங்கள் விவரம்: சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டி, 16 படுக்கை வசதி கொண்ட பெட்டி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கான 2-ஆம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.