முகப்பு
சென்னை

கடலில் குளித்த ரெளடி மாயம்

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:47 AM
பகிர்:

சென்னை காசிமேட்டில் குளித்த ரெளடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

காசிமேடு ஜிஎம் பேட்டை எஃப் பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (எ) பாம்பாட்டி மணிகண்டன் (23). இவா் மீது அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா்.

மணிகண்டன், சனிக்கிழமை மாலை காசிமேடு பழைய வாா்ப்பு பகுதியில் தனது நண்பா்கள் தினேஷ், அபினேஷ், ஆகியோருடன் மது போதையில் கடலில் குளித்தபோது, அபினேஷும், தினேஷும் கரைக்கு வந்துவிட்ட நிலையில், மணிகண்டன் திரும்ப வரவில்லை.

Advertisement

இதனால், அவரது நண்பா்கள், மணிகண்டனைத் தேடினா். ஆனால் மணிகண்டன் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாா், காணாமல்போன மணிகண்டனை இரு நாள்களாக தீவிரமாகத் தேடி வருகின்றனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.