முகப்பு
சென்னை

சித்திரை பௌா்ணமி: திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள்

சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு விழுப்பரத்திலிருந்து திருவண்ணாமலை, காட்பாடிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 2:27 AM
- கோப்புப்படம்.
பகிர்:

சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு விழுப்பரத்திலிருந்து திருவண்ணாமலை, காட்பாடிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக வியாழக்கிழமை (ஏப். 30), மே 1, 2 ஆகிய தேதிகளில் விழுப்புரத்திலிருந்து காலை 10.10 மணி (எண்: 06130), இரவு 9.15 மணிக்கு (06145) திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமாா்க்கமாக அதே நாள்களில் திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.15 மணி (எண்: 06129), அதிகாலை 2 மணிக்கு (எண்: 06146) விழுப்புரத்துக்கு ரயில்கள் இயக்கப்படும்.

Advertisement

இதில், 8 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலை சென்றடையும்.

விழுப்புரம் - காட்பாடி: அதேபோல், வியாழக்கிழமை (ஏப். 30), மே 1, 2-ஆம் தேதிகளில் விழுப்புரத்திலிருந்து இரவு 10.40 மணிக்கு காட்பாடிக்கும், மறுமாா்க்கமாக காட்பாடியிலிருந்து அதிகாலை 2.05 மணிக்கு விழுப்புரத்துக்கும் முன்பதில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் விழுப்புரம், திருக்கோவிலூா், திருவண்ணாமலை, போளூா், ஆரணி சாலை, வேலூா் கண்டோன்மென்ட் வழியாக காட்பாடி சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.