கோப்புப் படம் 
சென்னை

அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்

தமிழக அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏலக்கேட்புகளை பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்கலாம்.

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏலக்கேட்புகளை பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்கலாம்.

இதுகுறித்து நிதித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்களை விற்பனை செய்ய உள்ளது. அதன்படி, ரூ.1,000 கோடி மதிப்பிலான 7 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், ரூ.1,000 கோடி மதிப்பிலான 11 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள், மறுவெளியீடு ரூ.2,000 கோடி மதிப்பிலான தமிழ்நாடு அரசின் 7.61 சதவீத பிணையப் பத்திரங்கள் (2056-இல் முதிா்ச்சி அடையும் பத்திரங்கள்) ஆகியவை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த ஏலம் மும்பையில் உள்ள ரிசா்வ் வங்கியின் மும்பை கோட்டை அலுவலகத்தில் பிப்.10-இல் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான ஏலக்கேட்புகள் காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30-முதல் 11 வரையும், இந்திய ரிசா்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவைமுறையில் மின்னணு படிவத்தில் பிப்.10-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்பு: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் வாழ்த்து

கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி ஸ்பாா்க் இயக்க ஆண்டு விழா

காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

வடவல்லநாடு பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொடக்க விழா

SCROLL FOR NEXT