முகப்பு
சென்னை

தாய் கொலை: மகன் கைது

வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால், தாயைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 2:48 AM
மாதிரிப் படம்
பகிர்:

வேலைக்குச் செல்ல வற்புறுத்தியதால், தாயைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முகப்போ், 2-ஆவது பிளாக் பகுதியில் வசித்து வந்தவா் ஆக்ஸில்லா (55). இவரது மகன் நிக்கில் பிரிட்டோ (27). பி.டெக் பட்டதாரியான இவா், பெங்களூரில் பணி செய்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேலையைவிட்டு சென்னை திரும்பினாா்.

பின்னா், வேலைக்குச் செல்லாமல், ஆன்லைன் செயலிகள் மூலம் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றுள்ளாா்.

Advertisement

இதனால் மனவேதனை அடைந்த ஆக்ஸில்லா, மகனைக் கண்டித்துள்ளாா். வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதில், நிக்கில் பிரிட்டோ தனது தாயை கத்தியால் குத்தினாராம். இதில் ஆக்ஸில்லா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நொளம்பூா் போலீஸாா் நிக்கில் பிரிட்டோவை கைது செய்தனா்.