திமுக தனது தோ்தல் பிரசாரத்துக்காக 125 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களைப் பயன்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டிள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலா்கள் ஆணையின்படி, மாவட்டங்கள்தோறும், ஊராட்சிகளில் பணிபுரியும், ஊராட்சிச் செயலா்கள், 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருவது சட்ட விரோதமானது. எனவே, அவா்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.
கிராம ஊராட்சியின் வளா்ச்சிக்காகப் பணியாற்றும் கிராமச் செயலா்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் பணித்தளப் பொறுப்பாளா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோரை திமுக அரசு தங்களது சுயலாபத்துக்காக, தோ்தல் பிரசார வேலைகளில் ஈடுபடுத்துவதுக்கு கண்டனத்துக்குரியது. இதை திமுக அரசு உடனயாக நிறுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.