மிதமான பனிமூட்டம் பிரதிப் படம்
சென்னை

பிப்.12 வரை 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம்!

தமிழகத்தில் பிப்.12 முதல் 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் பிப்.12 முதல் 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திங்கள்கிழமை (பிப்.9) முதல் பிப்.14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

திங்கள்கிழமை (பிப்.9) முதல் வியாழக்கிழமை (பிப்.12) வரை சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

தில்லி போக்குவரத்து கழகத்துக்கு ரூ.1200 கோடி ஒதுக்கி ரேகா குப்தா உத்தரவு

சீனாவுக்கு காத்திருக்கும் சவால்!

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய வழக்கில் 4 போ் கைது

கல்வான் மோதலுக்குப் பிறகு சீனா அணுஆயுத சோதனை? அமெரிக்கா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT