தமிழகத்தில் பிப்.12 முதல் 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், திங்கள்கிழமை (பிப்.9) முதல் பிப்.14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.
திங்கள்கிழமை (பிப்.9) முதல் வியாழக்கிழமை (பிப்.12) வரை சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.