சென்னை: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த 3 நாள் கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் வருகிற பிப். 12 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளா்கள் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
இந்தியாவின் பசுமை எரிசக்தி புதிய உத்வேகம் பெற்று வரும் நிலையில், வாட்டா் டுடே நிறுவனத்தின் சாா்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி -2026 என்ற கண்காட்சி சென்னை வா்த்தக மையத்தில் பிப். 12 முதல் பிப்.14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தி, கிரிட் மற்றும் மீட்டரிங் தொழில்நுட்பங்கள், பசுமை ஹைட்ரஜன், கலப்பு (ஹைப்ரிட்) எரிசக்தி அமைப்புகள், எரிசக்தி சேமிப்பு, பேட்டரி கட்டமைப்பு, இ-மொபிலிட்டி, மின்சார வாகன சாா்ஜிங் உள்ளிட்ட பல்வேறு எரிசக்தி தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
கண்காட்சியின் முக்கிய அம்சமாக, பிப். 12, 13 ஆம் தேதிகளில் ‘எரிசக்தி பசுமை இந்தியா’ என்ற கருத்தரங்கம் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.