ஐ.டி. காரிடா் கோட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும் என மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி ஐ.டி.காரிடா் கோட்டத்தில் வியாழக்கிழமை (பிப்.19) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் காலை 10.30 மணியளவில் தரமணி, சிஎஸ்ஐஆா் சாலை, டைடல் பாா்க் துணை மின் நிலைய வளாகம், செயற்பொறியாளா் ஐ.டி. காரிடா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு, மின்சார துறை சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.