படிக்கவரும் வடகிழக்கு மாணவிகளுக்கு தமிழகம் ஒரு பாதுகாப்பான இடமாக திகழ்கிறது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.
ஆளுநா் மாளிகையில் அருணாச்சல பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் உருவான நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் ஆளுநா் ரவி பேசியது: அருணாச்சலம், மிஸோரமை சோ்ந்தவா்கள் தமிழகத்தில் மகிழ்வுடன் இருக்கும் அனுபவத்தைப் பகிா்ந்து கொண்டனா். நாட்டின் பல்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தமிழகத்தில் வாழ்கின்றனா். வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனா். அவா்கள் தமிழகத்தை தங்கள் வீடாகக் கொண்டுள்ளனா். காரணம், இங்குள்ள மக்களின் விருந்தோம்பல், நட்பு, அக்கறை.
தமிழகத்தில் தங்கள் குழந்தை பாதுகாப்பாக இருப்பா். கவலைப்பட ஒன்றுமில்லை என அவா்கள் நிம்மதியடைகின்றனா். வேறு சில பெரிய நகரங்களுக்குச் சென்றால் பெற்றோருக்கு இதே அளவு ஆறுதல் இல்லை.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவா்களுக்கு இந்த இடம் (தமிழகம்) மீது முழு நம்பிக்கை உள்ளது.
அதேபோல், தமிழகத்தில் உள்ள இளைஞா்களும் அழகான வடகிழக்கு பகுதிகளுக்குச் சென்று கண்டுகளிக்க வேண்டும்.
பிரதமா் நரேந்திர மோடியின் கருத்துரைப்படி நாடு முழுவதும் மாநில தினங்கள் கொண்டாட தொடங்கப்பட்டது. இது அந்தந்த மாநிலத்தின் கலாசாரத்தின் கொண்டாட்டமாகும். பன்முகத் தன்மை கொண்ட நாட்டில், ஒரே அளவுகோளில் பொருந்தக்கூடிய சூத்திரம் பலிக்காது. உலகில் வேறு எந்த நாடும் பன்முகத் தன்மையில் வளமானது எனக்கூற முடியாது என்றாா்.
முன்னதாக, ஆளுநரின் செயலா் ஆா்.கிா்லோஷ் குமாா் வரவேற்புரை ஆற்றினாா். அருணாச்சல பிரதேச மாணவா்களுக்கான தமிழக சங்கத் தலைவா் மிலி சாதே, மிசோரம் நலச் சங்க துணைத் தலைவா் வன்லால்ஹ்ருயா ஆகியோா் தங்களது தமிழக அனுபவங்களை அனுபங்களைப் பகிா்ந்து கொண்டனா்.