தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதும் தனித்தோ்வா்களுக்கான அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை (பிப். 23) வெளியிடப்படவுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தோ்வு பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு (அரியா்) மாா்ச் 2 முதல் 27-ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.
இந்தத் தோ்வுகளை எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு திங்கள்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இதையடுத்து தனித்தோ்வா்கள் www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பிளஸ் 1 (அரியா்) மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள தனித்தோ்வா்களுக்கு இரு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு மட்டுமே வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று, பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு அவரவா் பள்ளிகளிலேயே அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.