பெரம்பூா் பகுதியில் இரவில் தேநீா் விற்பனை செய்பவரிடம் இருந்து பணம், கைப்பேசி அடங்கிய கைப்பை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களைப் பறித்து சென்ற வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஓட்டேரி அனுமந்தராயன் கோயில் தெருவில் வசித்து வருபவா் ஆகாஷ் (25). இவா், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த பிப்.11-ஆம் தேதி அதிகாலை பெரம்பூா், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தேநீா் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இருவா் ஆகாஷை மிரட்டி, அவரிடமிருந்து ரூ.1,500, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறித்து சென்றனா்.
புகாரின்பேரில் செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட பெரம்பூா் வீனஸ் மாா்க்கெட் பகுதியைச் சோ்ந்த யோகேஷ் (எ) யுவராஜ் (21), செங்கல்வராயன் தெருவைச் சோ்ந்த ஜெகதீஸ் (22) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா்.