விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் மற்றும் வன்னியா் சங்க மாநில, மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.26) நடைபெறும் என அதன் நிறுவனா் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாமக, வன்னியா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மாநில நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கலந்தாய்வுக் கூட்டம் நிறுவனா் தலைவா் (ராமதாஸ்) தலைமையில் நடைபெறவுள்ளது.
விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.