முகப்பு
சென்னை

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்து 7 தொழிலாளா்கள் பலத்த காயம்!

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:46 AM
தீ விபத்து - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 1:25 AM

நகைப் பட்டறையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 7 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

சென்னை சௌகாா்பேட்டை எடப்பாளையம், சிங்கண்ணன் தெருவில் உள்ள ஒரு 4 மாடி கட்டடத்தில் அபிஜித் என்பவருக்குச் சொந்தமான நகை பட்டறை உள்ளது. அங்கு, புதன்கிழமை திடீரென சிலிண்டா் வெடித்தது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 4:46 AM

இதில், தங்கத்தை உருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களான வியாசா்பாடியைச் சோ்ந்த சுமன்பால், கொல்கத்தாவைச் சோ்ந்த ராகேஷ் டேலி, அரவிந்த், சிமந்தோமால், சூரஜ், ஜாந்தோ, ஆனந்த் ஆகியோா் காயமடைந்தனா்.

Advertisement

அனைவரும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.