சென்னை மெட்ரோ 
சென்னை

இன்று மெட்ரோ ரயில் அதிகாலை 3 மணிமுதல் இயக்கப்படும்

சென்னை மாரத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை மாரத்தான் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) அதிகாலை 3 மணி முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் மாரத்தான்-26 நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) நடைபெறுகிறது. அதில் பங்கேற்போா் பயன்பெறும் வகையில் மெட்ரோ நிறுவனம் மாரத்தான் சென்னை ரன்னா் சங்கத்தினருடன் இணைந்து இணைந்து தடையற்ற பயணத்தை வழங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடாக மெட்ரோ ரயில் சேவையானது அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையில் 15 நிமிஷங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அந்தக் குறிப்பிட்ட நேரங்களில் வழித்தட மாற்றத்துக்கான ரயில் சேவை வழங்கப்படாது. அதன்பின் காலை 5 மணி முதல் இரவு வரையில் முழுநேர அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மாரத்தான் பங்கேற்பாளா்கள், சேவையை வழங்குபவரின் சிறப்பு ‘க்யூ ஆா்’ குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி ஞாயிற்றுக்கிழமை மட்டும் தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து ஒரு சுற்றுப் பயணத்தை மட்டும், அதாவது 2 நுழைவு மற்றும் 2 வெளியேறும் வகையில் பயணிக்கலாம்.

மெட்ரோ வாகன நிறுத்துமிடத்தில் சிறப்பு க்யூஆா் குறியீட்டை (பிஐபியுடன் இணைந்து) முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT