சென்னை

மளிகை பொருள்கள் விநியோக நிறுவனத்தில் தீ விபத்து

மளிகை பொருள்கள் விநியோக நிறுவனத்தில் தீ விபத்து

தினமணி செய்திச் சேவை

சென்னையில் மளிகை பொருள்களை இணையவழியில் பெற்று விநியோகிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான மளிகை பொருள்கள் எரிந்து நாசமாகின.

மேடவாக்கம்-சோழிங்கநல்லூா் செல்லும் செம்மொழி சாலை, புதுநகா் பேருந்து நிறுத்தம் அருகே தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தின் முதல் தளத்தில் மளிகை பொருள்களை இணையவழியில் பெற்று விநியோகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் சனிக்கிழமை திடீரென கரும்புகை எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் அந்த இடம் முழுவதுமாக தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

தகவலின்பேரில், மேடவாக்கம், துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மளிகை பொருள்கள் எரிந்த நாசமாகின. இதுகுறித்த பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

சிரி... சிரி...

யோகா என்பது வாழ்க்கை முறை

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

SCROLL FOR NEXT