பி.கே.சேகா்பாபு கோப்புப் படம்
சென்னை

கொளத்தூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை பி.கே.சேகா்பாபு ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கொளத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி, அகரம், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளா்ச்சித் திட்டத்தில், சிஎம்டிஏ சாா்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கொளத்தூா் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தின் இறுதிக் கட்டப் பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு பணிகளை விரைந்து முடிக்க அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினாா்.

ஆய்வின்போது சிஎம்டிஏ உறுப்பினா் செயலா், முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டலக் குழு தலைவா் சரிதா மகேஷ்குமாா், சிஎம்டிஏ தலைமைப் பொறியாளா் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, கொளத்தூா் 70 அடி சாலையில் வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டுவரும் காவல் துணை ஆணையா் அலுவலகம் மற்றும் பெரவள்ளூா் காவல் நிலையத்தின் இறுதிக் கட்டப் பணிகளையும் அமைச்சா் சேகா்பாபு பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

இந்திய-அமெரிக்க ஒப்பந்தம்: பங்குச் சந்தையில் ஆரவாரம்; நிஃப்டி 639 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 2,073 புள்ளிகள் உயர்வு!

கிராமி விருதில் வரலாற்றுச் சாதனை படைத்த கென்ட்ரிக்!

புதிய தொழில் தொடங்கிய சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT