சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை!
சென்னையில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவது குறித்து...
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னையில் காலையில் கடும் வெப்பம் வாட்டிய நிலையில், திடீரென்று மழை மேகங்கள் சூழ்ந்து, பலத்த மழை பெய்து வருகிறது.
அம்பத்தூர், கோயம்பேடு, அண்ணாநகர், ஆவடி, கொளத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement
சுமார் 0.9 கிமீ உயரத்தில் கிழக்கு விதர்பா முதல் தமிழக பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
சுமார் 3.1 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று(ஜூன் 18) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இந்த ஜூன் மாதத்திலேயே சென்னைக்குக் கிடைக்கவிருக்கும் மழை இதுதான்.
வட சென்னையில் உருவாகியுள்ள பலத்த புயல் மேகங்கள், அம்பத்தூர் வழியாக நகர்ந்து நகருக்குள் வருகின்றன. இந்த ஜூன் மாதம் முழுவதும் தினமும் புயல் மேகங்கள் உருவானாலும், அவை சென்னையைத் தவிர்த்தே வந்தன.
வெப்பத்தைத் தணிக்கக்கூடிய வகையிலான, பரவலான இடியுடன் கூடிய மழையைக் கூட நாம் இதுவரை காணவில்லை.
காவிரி டெல்டா பகுதியில், காரைக்கால் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.