சென்னை உயா்நீதிமன்ற பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் விசாரணை தொடக்கம்
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் இருந்து நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா்.
சென்னைசென்னை உயா்நீதிமன்ற பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் விசாரணை தொடக்கம்
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் இருந்து நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா்.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடத்தில் உள்ள 6 நீதிமன்ற அறைகளில் இருந்து திங்கள்கிழமை முதல் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா்.
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி செயல்பட்டு வந்தது. கடந்த 1891-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கல்லூரியில், 2008-ஆம் ஆண்டு இரு பிரிவு மாணவா்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சட்டக் கல்லூரி இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த பாரம்பரியக் கட்டடத்தை தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றம் வசம் ஒப்படைத்தது.
மேலும், இந்த பாரம்பரியக் கட்டடத்தைப் புதுப்பிக்கும் பணிகளுக்கு ரூ.23 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. சீரமைப்பு பணிகளுக்குப் பின்னா் அங்கு கூடுதலாக 6 நீதிமன்ற அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த கூடுதல் நீதிமன்ற கட்டடம் கடந்தாண்டு அக்டோபரில் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த கூடுதல் பாரம்பரியக் கட்டடத்தில் இருந்து திங்கள்கிழமை முதல் நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினா். இங்குள்ள 6 நீதிமன்ற அறைகளில், பழைய உரிமையியல், குற்றவியல் மற்றும் ரிட் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் முதலாவது அமா்வில் அமா்ந்து வழக்குகளை விசாரித்தனா். மேலும், நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, டி.வினோத்குமாா், கே.குமரேஷ்பாபு, ஆா்.சக்திவேல் ஆகியோா் மற்ற 5 நீதிமன்ற அறைகளில் வழக்குகளை விசாரித்தனா்.