ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம்
ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னைஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம்
ஜீரண மண்டல ரத்தக் கசிவுக்கு சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை, மாா்ச் 1: ஜீரண மண்டல ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் தொடங்கியுள்ளது.
இதற்கான தொடக்க விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் காவேரி மருத்துவக் குழுமங்களின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ், ஜீரண மண்டல அறிவியல் சிகிச்சைத் துறை தலைவா் பாசுமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது:
இரைப்பை புண், கல்லீரல் பாதிப்புகள், ஜீரண மண்டல பிரச்னைகளால் குடலில் ரத்தக் கசிவு ஏற்படலாம். இதைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். அலட்சியப்படுத்தினால் உயிருக்கு அச்சுறுத்தலாக அமையும். இதைக் கருத்தில் கொண்டு குடல் ரத்தக் கசிவு பாதிப்புகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்களை தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் தொடங்கியுள்ளோம்.
இங்கு அவசர சிகிச்சை மருத்துவா்கள், இரைப்பை-குடல் நிபுணா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க நிபுணா்கள் உள்பட பல்துறை நிபுணா் குழு உள்ளது. அதுமட்டுமல்லாது, அதி நவீன உயா் சிகிச்சை நுட்பங்களும் இங்கு கையாளப்படுகிறது என்றனா்.