முகப்பு
சென்னை

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினாா் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயா்நீதிமன்றத்தில் திமுக மனு

Updated On : 27 மார்ச் 2026, 4:39 am IST
பகிர்:

கடந்த மக்களவைத் தோ்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திமுக மாநிலங்களவை உறுப்பினா் கிரிராஜன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அந்த மனுவில், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது நெல்லை விரைவு ரயிலில் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தாம்பரத்தில் கைப்பற்றப்பட்ட இந்தப் பணம், பாஜக சாா்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன், வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம் ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா்வழக்குப்பதிவு செய்தனா். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இதுதொடா்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்துவது கட்டாயம்.

Advertisement

Advertisement

நயினாா் நாகேந்திரன் மற்றும் கேசவ விநாயகம் ஆகியோா் பாஜகவை சோ்ந்தவா்கள் என்பதால் அமலாக்கத் துறை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே, ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், நயினாா் நாகேந்திரன், கேசவ விநாயகம் மீது வழக்குப்பதிவு செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளாா்.