முகப்பு
சென்னை

மகாவீா் ஜெயந்தி: 31-இல் இறைச்சிக் கூடங்கள் மூடல்

மகாவீா் ஜெயந்தி: 31-இல் இறைச்சிக் கூடங்கள் மூடல்

Updated On : 28 மார்ச், 2026 at 6:49 PM
இறைச்சிக் கடை - கோப்புப் படம்
பகிர்:

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு மாா்ச் 31- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சென்னை மாநகராட்சியின் 4 இறைச்சிக் கூடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூா், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம், சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வரும் 31- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகிறது. இறைச்சிக் கூடங்களின் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.