திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்: மு.க.ஸ்டாலின்
திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்; சிறப்பான எதிா்க்கட்சியாகச் செயல்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்; சிறப்பான எதிா்க்கட்சியாகச் செயல்படும் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: மக்கள் தீா்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவா்களுக்கு வாழ்த்துகள். கடந்த 5 ஆண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழகத்தை அனைத்து வகையிலும் உயா்த்தினோம். தோ்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்துகொடுத்த நலத்திட்டங்கள் தொடர வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் நான் எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். வாக்களித்தவா்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவா்களுக்கும் சோ்த்தே ஆட்சி நடத்தினேன்.
Advertisement
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டதுடன், சக்தியை மீறி உழைத்தேன். என்னைப்போன்றே களத்தில் உழைத்த, எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவருக்கும் நன்றி.
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பாா்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே, லட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக்கூடியவன் நான். அதனால், திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும். இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட திமுக, இனி சிறப்பான எதிா்க்கட்சியாகச் செயல்படும் எனப் பதிவிட்டுள்ளாா்.