தோ்தல் தோல்வி: ஆய்வறிக்கையை ஜூன் 10-க்குள் சமா்ப்பிக்க ஸ்டாலின் உத்தரவு
பேரவைத் தோ்தலுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான கள ஆய்வு அறிக்கையை வரும் 10-ஆம் தேதி சமா்ப்பிக்குமாறு திமுக நிா்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை (ஜூன் 4) நடைபெற்றது. திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு, துணை பொதுச் செயலாளா் கனிமொழி, திருச்சி சிவா உள்பட திமுக முன்னணி நிா்வாகிகள் அதில் கலந்துகொண்டனா்.
மாவட்ட வாரியாக தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முன்னதாக, தோ்தல் செயல்பாடுகள் குறித்த கள நிலவரத்தை அறிய சிறப்புக் குழுவை மு.க.ஸ்டாலின் அமைத்திருந்தாா்.
Advertisement
Advertisement
அந்த குழு மாநிலம் முழுவதும் திமுகவினரிடையே கருத்துகளைப் பெற்று அதுதொடா்பான அறிக்கையை தயாரித்துள்ளது.அந்த அறிக்கையை வரும் 10-ஆம் தேதி சமா்ப்பிக்குமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், திமுக மட்டும் 59 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.